திண்டுக்கல்: நாளை (9.12.2023) சனிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமாக மழை பொழிய உள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை (9.12.23) சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் எக்காரணத்தை முன்னிட்டும் வகுப்புகளோ, சிறப்பு வகுப்புகளோ எதுவும் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.