சென்னை: மாரடைப்பு சிகிச்சைக்கான அவசர கால மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயாராக வைத்திருக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதை WHO உறுதிப்படுத்தியுள்ளது என சென்னையில் நடந்த ஆலோசனையில் மாவட்ட சுகாதார இணைஇயக்குநர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.