புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் ரூ.100கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல தனியார் கல்வி நிறுவனங்களில் பொய்யான மாணவர் சேர்க்கையை காட்டி உதவித்தொகை பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜீவிகா இன்ஸ்டியூட் ஆப் பார்மசி தலைவர் ராம் கோபாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் காவலில் வைக்கப்பட்ட அவர் லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.