சென்னை: குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி.விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சில மாதங்களுக்கு முன் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை அதிகாரி ஆஜராகி ஒப்புதல் கடிதம் பரிசீலனையில் உள்ளது என்றார். இதையடுத்து நீதிபதி, ஒப்புதல் கடிதம் தாக்கல் ெசய்யப்படாததால் விசாரணையை ஏப்ரல் 15க்கு தள்ளிவைக்கிறேன் என்றார்.