விழுப்புரம்: விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 84 பேர் நலமுடன் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 52 குழந்தைகள் உட்பட 84 பேரிடம் உடல்நிலை குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். தரமற்ற முறையில் வீட்டிலேயே குல்பி ஐஸ் தயாரித்த சிறு நிறுவனத்துக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.