அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள டிபி குளோபல் எப்எக்ஸ் மூலம் சட்டவிரோத அந்நிய செலாவணி வர்த்தகம் நடந்ததாக வந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதை தொடர்ந்து அகமதாபாத்தில் அமலாக்கத்துறை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள், ரூ.1.36 கோடி ரொக்கம், 1.2 கிலோ தங்கம் (தோராயமாக ரூ. 71 லட்சம்), சுமார் ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்கள், வங்கி கணக்கில் இருந்த ரூ.14 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 242.39 கோடி ஆகும். மேலும் அமலாக்கத்துறை சார்பில் 23 அசையா சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் ரூ.242 கோடி சொத்துக்கள் பறிமுதல்
previous post