சென்னை: அமோனியம் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி அளித்துள்ளது. எண்ணூர் பகுதியில் கோரமண்டல் தொழிற்சாலை அமோனியம் வாயுக்கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.