Sunday, May 12, 2024
Home » உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான்: முகமது ஷமி பேட்டி

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான்: முகமது ஷமி பேட்டி

by Suresh

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட்அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடவில்லை. அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சுவாரசியமான பதில் அளித்தார். இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்றால் அது விராட் கோஹ்லிதான். அவரது சாதனைகளே அவர் யாரென்று சொல்லும். அவர் இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார். அதே சமயத்தில் உலகத்தின் சிறந்த பேட்ஸ்மேனும் அவர்தான்.

அதே சமயத்தில் உலகின் ஆபத்தான பேட்ஸ்மேன் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது ரோகித் சர்மாதான். அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன். மிகப் பயங்கரமாக பந்துகளை அடிப்பார், என்றார். சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு, இது மிகவும் கடினமான கேள்வி. ஒப்பிடுதல்களுடன் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால், என்னை பொறுத்தவரையில், ேடானி தான் சிறந்த கேப்டன். அவர் இந்தியாவுக்காக பல கோப்பைகளை வென்றுள்ளார். அவரைப்போல், யாரும் வெற்றி பெறவில்லை என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

8 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi