தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர்-கிருஷ்ணகிரி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த நவலை கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை(59) என்பவர் மாட்டிறைச்சி தூக்கு பாத்திரத்தில் விற்பனைக்கு எடுத்து சென்றதையறிந்து, பேருந்து நடத்துனர், நடு வழியில் இறக்கிவிட்டுள்ளார்.
இதனால் செய்வதறியாது தவித்த பாஞ்சாலை நடந்தே அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, வேறு பேருந்தில் ஏறி வீடு சென்றுள்ளார். இந்நிலையில் பெண் பயணியை பாதுகாப்பில்லாமல், நடு வழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து ஓட்டுநர் சசிக்குமார் மற்றும் நடத்துனர் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.