சென்னை: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், கல்வியிலும் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடும் இதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் கல்வி எட்டாக்கனியாக இருந்தது, நீதிக்கட்சி மூலம் கல்வி கிடைக்க வழிவகை கிடைத்துள்ளது என்று உயர்கல்விக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.