புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவோவேக்ஸ் தடுப்பூசியை பன்முக தன்மை கொண்ட பூஸ்டர் தடுப்பூசியாக அரசின் கோவின் தளத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சீரம் நிறுவனம் ஒன்றிய சுகாதார துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் கடந்த 27ம் தேதி இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். முன்னதாக கடந்த மாதம், கொரோனா பணிக்குழு தலைவர் என்கே அரோரா, கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பன்முகத்தன்மை கொண்ட கோவோவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்துவதற்கு கோவின் தளத்தில் சேர்க்க வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தார்.