சென்னை: ஆளுநர்களின் செயல்பாடுகளால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய அளவுக்கு ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றார். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு த.வா.க, கொ.ம.தே.க. வரவேற்பு தெரிவித்துள்ளது.