சென்னை: ஆளுநர் ரவியின் அதிகார அத்துமீறல் பற்றி ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதற்கு இந்திய கம்யூ. வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை பட்டியலிட்டு விரிவான கடிதம் எழுதியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்புக்கு ஊசி முனையளவும் பொருத்தம் இல்லாதவர் என்பதை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ஜனநாயக உணர்வை பிரதிபலித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.