டெல்லி : நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்துப் பேச முதலமைச்சர் தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் முதலமைச்சரை சந்திப்பதாக ஆளுநர் கூறியது ஏன் என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, ஆளுநர் தாமாக முன்வந்து முதலமைச்சரை சந்தித்துப் பேசியிருக்க வேண்டும் என்றார். முதலமைச்சர் – ஆளுநருக்கு இடையே சுமூக உறவு இருந்தால் தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.