சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல் 40 மாணவர்கள் இருக்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் படிப்பதால் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.