Thursday, May 23, 2024
Home » ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.49,000ஐ நெருங்கியது.. வரும் மாதங்களில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்து விடுமோ?

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.49,000ஐ நெருங்கியது.. வரும் மாதங்களில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்து விடுமோ?

by Porselvi

சென்னை: வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்தோடு காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தொடர்ச்சியாக அதிகரித்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.46,480க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. அதாவது 29ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு பவுன் ரூ.46,520க்கு விற்கப்பட்டது.1ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.46,720க்கும் விற்கப்பட்டது. 2ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.47,520க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

மார்ச் 4ம் தேதி ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5930க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.47,440க்கும் விற்கப்பட்டது. மார்ச் 5ம் தெரஃஹி கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,015க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.48,120க்கும் விற்கப்பட்டது. அதே போல் மார்ச் 6ம் தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ. 48,320க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து மார்ச் 7ம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,090க்கு விற்பனையாகிறது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது நகை வாங்குவோருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே உயர்ந்தால் வரும் மாதங்களில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நகை வாங்குவோரிடையே நிலவி வருகிறது.

You may also like

Leave a Comment

14 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi