அருப்புக்கோட்டை, ஆக.29: அருப்புக்கோட்டை அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர், நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி நீண்டநேரம் வீடு திரும்பாததால், அவரை தேடி சிறுமியின் தந்தை சென்றார்.
சிறுமியின் பெயரை கூறி அழைத்தவாறு சென்றார். சத்தம் கேட்டதும் பாண்டியராஜன் சிறுமியிடம், நடந்த சம்பவத்தை உனது தந்தையிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு தப்பி சென்றார்.
நடந்த சம்பவத்தை சிறுமி தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோவில் பாண்டியராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.