திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் திருவல்லம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (36). தொழிலாளி. கடந்த 5 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியிடம் ரதீஷ் அத்துமீறியதால் அந்த சிறுமி தன்னுடைய தாயிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மலையின்கீழ் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ரதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ்குமார், சிறுமியை பலாத்காரம் செய்த ரதீஷுக்கு 91 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.