Saturday, July 27, 2024
Home » சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர் தப்பி ஓட்டம்

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர் தப்பி ஓட்டம்

by Francis

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டிற்கும், மறுமார்க்கமாக கிண்டி, சைதாப்பேட்டை வழியாக சென்னை கடற்கரைக்கும் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்டு சென்றது. பின்னர் ரயிலில் வந்து இறங்கிய பயணிகள் கூட்டமாக நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அதே ரயிலில் வந்த பெண்ணை அடையாளம் தெரியாத மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இச்சம்பவத்தால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ைண மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பெண் யார், எதற்காக வெட்டினார், அந்த பெண்ணுக்கும், அவருக்கும் ஏதாவது பிரச்னையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi