ஈரோடு: ஈரோட்டில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. 2021-ல் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக கதிரேசன் போக்சோவில் கைது செய்யப்ட்டார். இந்த வழக்கில் கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.