மாமல்லபுரம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடந்தது. பேரணிக்கு, செயல் அலுவலர் கணேஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா கலந்து கலந்து கொண்டு, கடற்கரை கோயில் அருகே கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி கடற்கரை செல்லும் சாலை, கிழக்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை வழியாக வந்து அர்ஜூனன் தபசு சிற்பம் முன்பு நிறைவு பெற்றது.
பேரணியில், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, கிங்ஸ் அகாடமி கல்லூரி மாணவ – மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, குப்பைகளை கண்மூடி தனமாக சாலையில் போடாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும். நாம் வசிக்கும் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் கெஜலட்சுமி, லதா, வள்ளி, மஞ்சு, துர்காசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா பாராட்டினார்.