கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 12 பெட்டிகள் தடம்புடைந்துள்ளது. ஒண்டா ரயில் நிலையம் அருகே அதிகாலை 4 மணி அளவில் 2 சரக்கு ரயில்களும் மோதிக்கொண்டது. சரக்கு ரயில் விபத்தில் உயிர்சேதம் இல்லை எனவும் ஒரு ரயிலின் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.