திருவனந்தபுரம்: கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி சியாத் ரகுமான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சியாத் ரகுமான், காங்கிரஸ் தலைவர் சுதாகரனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 23ம் தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும், கைது செய்தால் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மோசடி வழக்கு கேரள காங். தலைவர் சுதாகரனுக்கு இடைக்கால முன்ஜாமீன்
previous post