விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மனுதாரராக சேர்த்துக்கொள்ள கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கனிம வள அமைச்சராக இருந்தபோது அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டது.