சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன் மறைவுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். லட்சுமிநாராயணன் 1987-93 காலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்து திறம்பட பணியாற்றியவர் ஆவார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், முன்னாள் இந்நாள் அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
previous post