மதுரை: மதுரை கருவனூரில் கோயில் விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கைது செய்யப்பட்டார். கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோயிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்ததுடன் அருகில் இருந்த வீடுகள் மீதும் கற்களை எறிந்து தாக்குதல் நடந்துள்ளது.