சென்னை : சென்னை கார் உற்பத்தி ஆலையை விட்டு வெளியேறியதை ஃபோர்டு நிறுவனம் மறுபரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. JSW குழுமத்திற்கு அந்த ஆலையை விற்கும் ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், தற்போது அதனை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கார் சந்தை மேம்பட்டுள்ளதால் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனமே ஆலையை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.