தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் பள்ளி மேற்படிப்பிற்காக உதவித்தொகை வழங்க 237 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 1,353 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிப் படிப்பு உதவித்தொகை வழங்குவதற்காக 124 கோடி ரூபாயும், பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை வழங்குவதற்காக 237 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இம்மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு 193 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ரூ.237 கோடி ஒதுக்கீடு
previous post