சென்னை : வெள்ள பாதிப்புகளுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் தராத நரேந்திரமோடி வாக்கு கேட்டு தமிழ்நாடு வருவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “வட மாநில மக்களை ஏமாற்றியது போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று வருகிறார். ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்; தேர்தலில் மிகப்பெரிய தீர்ப்பை அளிப்பார்கள். பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில், பலர் போட்டியிடமாட்டேன் என ஓடுகின்றனர்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.