டெல்லி: தோல்வி பயத்தின் நடுக்கத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து மோடி பொய்களை கூறி வருகிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். “மோடி ஏழைகளின் தலைவர் அல்ல; பெரும் பணக்காரர்களின் தலைவர் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்திய மக்கள் தயாராகிவிட்டதை பாஜக உணர்ந்துள்ளது. தற்போது நடக்கும் தேர்தல் தங்களின் கையை மீறிச் சென்றுவிட்டது என்பதையும் பாஜக உணர்ந்துள்ளது” என ராகுல் கூறியுள்ளார்.