Saturday, May 18, 2024
Home » பா.ஜ ஆதரவாக செயல்படும் ஈடி, ஐடி, சிபிஐ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்: இது எனது உத்தரவாதம் ராகுல்காந்தி ஆவேசம்

பா.ஜ ஆதரவாக செயல்படும் ஈடி, ஐடி, சிபிஐ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்: இது எனது உத்தரவாதம் ராகுல்காந்தி ஆவேசம்

by Karthik Yash

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஆவேசம் அடைந்துள்ளார். அவர் மார்ச் 15ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை தனது எக்ஸ் தளத்தில் மறுபதிவிட்டு ‘இது என் உத்தரவாதம்’ என்று குறிப்பிட்டு அவர் கூறியிருப்பதாவது: புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பாஜ வரி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. மத்தியில் ஆட்சி மாறும் போது, ​​ஜனநாயகத்தை குலைத்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் நான் தப்ப விடமாட்டேன். இதையெல்லாம் யாரும் மீண்டும் செய்யத் துணியாத வகையில் முன்னுதாரணமான நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

three × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi