முற்றுகை போராட்டத்துக்காக இருசக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்பு எல்லை வழியாக டெல்லி நோக்கி சென்ற விவசாயிகளை போலீசார் கைதுசெய்தனர். பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து விவசாயிகள் குவிவதால் டெல்லி எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது. சர்வதேச எல்லையை போல் பஞ்சாப் – அரியானா எல்லையில் துணை ராணுவ படைகளை குவித்துள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.