சண்டிகர் : ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் காரணமாக ஹரியானாவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தின் அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களின் தொலைபேசி சேவைகள் தவிர, மொபைல் இணைய சேவைகள், SMS மற்றும் அனைத்து தொலைதொடர்பு சேவைகளும் பிப்ரவரி 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.