டெல்லி : விவசாயிகள் டெல்லிக்கு ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனே பட்டியலிட பஞ்சாப், அரியானா ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி எல்லைகளில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளை அகற்ற விவசாயிகள் ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு செல்கின்றனர்.