திருச்சி: திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் (கட்சி சார்பற்றது) இன்று காலை முக்கொம்பு காவிரி பாலத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடக அரசை கண்டிப்பது, தமிழக மக்களின் குடிநீர், நிலத்தடி நீர், உணவு பாதுகாப்பை உறுதி செய்து இந்திய ஒருமைப்பாட்டையும், அரசியலமைப்பு சட்டத்தையும், இறையாண்மையையும் நிலை நிறுத்திட ஒன்றிய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்துவது.
தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி, கூடங்குளத்தில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடந்தது. இதில் ஏராளமான ெபண்கள், விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டனர்.