கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (42) இவர் இதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை புருஷோத்தமன் வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் புருஷோத்தமன் வராததால் அவரது மனைவி வாணிஸ்ரீ விவசாய பகுதியில் உள்ள போர்வெல்லுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் மின்சாரம் பாய்ந்து அங்கேயே உயிரிழந்ததை கண்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து உடலை கிராமப் பகுதிக்குள் கொண்டு வந்தனர்.
கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புருஷோத்தமன் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.