சென்னை: விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவியை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் வழங்கினார்.