காரைக்கால்: தமிழகம் மற்றும் காரைக்காலில் தங்கமுலாம் பூசிய செம்பு கம்பிகளால் ஆன போலி நகைகளை உருவாக்கி வங்கிகள் மற்றும் அடகு கடைகளில் அடகு வைத்து, நகைக்கடையில் விற்று பலகோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் ஜெரோம் ஜெசிமெண்ட், அவரது தோழியும் பெண் தொழிலதிபருமான புவனேஸ்வரி மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேரை காரைக்கால் நகர போலீசார் கடந்த மாதம் 12ம் தேதி கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருக்கும் சஸ்பெண்டான சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் ஜெசிமண்ட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ேலாகேஸ்வரன் பரிந்துரை செய்தார். ஏற்கனவே சஸ்பெண்டில் இருந்து, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதால், பணியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் ஜெசிமெண்டை டிஸ்மிஸ் செய்து புதுச்சேரி மாநில டிஜிபி மனோஜ்குமார் லால் உத்தரவிட்டார்.