டெல்லி: பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் எம்.பி. திருமாவளவன் மக்களவையில் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மக்கள், மாநில அரசின் மீதும் ஒன்றிய அரசின் மீதும் நம்பிக்கையை இழந்து நிற்கிறார்கள், மணிப்பூர் அரசிடம் இருந்த ஆயுதங்கள் மெய்தி மக்களால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக மாநில அரசே கூறுகிறது என்று மக்களவையில் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.