சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: பொதுத் தேர்வுகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படித்து தேர்வுக்கு வராமல் விடுபட்டவர்களை கண்டறியவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தை மே 3ம் தேதி பிற்பகலில் நடத்த வேண்டும். தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் தங்களின் பள்ளி பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பதையும், துணைத்தேர்வு எழுதுவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.