புதுடெல்லி: வௌியுறவு அமைச்சகத்தின் புதிய செய்தி தொடர்பாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று பதவி ஏற்றார். 1998 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ரவீந்தர் ஜெய்ஸ்வால், நியூயார்க்கில் இந்திய தூதரக ஜெனரலாக பணியாற்றி உள்ளார். கியூபா, தென்னாப்பிரிக்கா, போர்ச்சுக்கல் மற்றும் நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைகளிலும் பணிபுரிந்துள்ளார். மேலும் மேற்கு ஐரோப்பில் உள்ள நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவுகளை கவனிக்கும் இணைசெயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.