சென்னை: தேமுதிக தொண்டர்கள், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்; விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சிறந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களில் 15 லட்சம் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். “ராகுல்காந்தி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் இடம் ஒதுக்கி கொடுத்து, அவரது இறுதி பயணத்திற்கு எல்லா விதத்திலும் உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் தேமுதிக சார்பாக பிரேமலதா நன்றி தெரிவித்தார்.