Sunday, June 16, 2024
Home » பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

by Neethimaan

சென்னை: பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்ததாரர் பதிவு – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்தல் – பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல தலைமை பொறியாளர் (பொ.ப.து) எழுதிய கடிதத்தில்; பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து பதிவு செய்ய அரசாணை எண்:1529, Home Dept., நாள்:03.05.1963 மற்றும் அரசாணை எண்:1848, பொதுப்பணித் துறை, நாள்:26:10.1972 இல் வழிவகை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரசாணை எண்:1529, Home Dept., நாள்:03.05.1963 மற்றும் அரசாணை எண்.1848, பொதுப்பணித்துறை, நாள்:26.10.1972 இன் படி பட்டியல் இனத்தவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க தெரிவிக்கப்படுகிறது. இந்த தெளிவுரைகளை ஒப்பந்த பதிவு செய்யும் அனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi