மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் அறிவுடைநம்பி (50). அரசு ஊழியரான இவர் கடந்த ஜன.5ம் தேதி விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இவர், தூத்துக்குடி எம்பி கனிமொழி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஏ.ஆர்.கே.ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் 7 பிரிவுகளின் கீழ் இரு வழக்கு பதிந்து அறிவுடைநம்பியை கைது செய்தனர்.