Sunday, June 16, 2024
Home » முன்னாள் விமான படை ஊழியர் தற்கொலை

முன்னாள் விமான படை ஊழியர் தற்கொலை

by Ranjith

ஆவடி: ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டைச் பகுதியை சேர்ந்தவர் வையாபுரி (43). இவர், இந்திய விமானப்படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, பின் தென்னக ரயில்வே ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு, மகன் சிவராஜ்குமார், மகள் திவ்யலட்சுமி ஆகியோருடன் வசித்துவந்தார். இந்நிலையில், வையாபுரி, நேற்றுமுன்தினம் காலை முதல் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, யாரிடமும் பேசாமல் அவரது அறையில் உறங்கச் சென்றவர் இரவு 7.30 மணிக்கு அவரது மகன் சாப்பிட கூப்பிடுவதற்காக, படுக்க அறையின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை.

எனவே, பதறிப்போன சிவராஜ்குமார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

12 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi