திருவள்ளூர்: முன்னாள் படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் காவல் துறைக்கு உதவியாக முன்னாள் படை வீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதிற்குட்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்ல விருப்பம் இருப்பின் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகம், ஜவகர்லால் நேரு சாலை, திருவள்ளூர் தலைமை அஞ்சலகம் எதிரில், திருவள்ளூர் – 602001 என்ற முகவரியிலோ அல்லது 044 – 29595311 என்ற தொலைபேசி எண்ணிலோ தங்கள் விருப்பத்தை நேரில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.