சென்னை: எண்ணூர் கழிமுகம் அருகே எண்ணெய் கழிவு முழுமையாக அகற்றப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த முதல்வர் எண்ணெய் கழிவை விரைந்து அகற்ற உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் கழிவு முழுமையாக அகற்றப்பட்ட பிறகு பாதிப்பு குறித்து கணக்கெடுத்து இழப்பீடு வழக்க நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய் கசிவை அடுத்து மீனவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.