ராஞ்சி: 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 192 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4, ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தியது.