மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை இந்திய மகளிர் அணி பதிவு செய்தது. நவி மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 428 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்காமல் 136 ரன்களுக்குள் சுருண்டது. 292 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்க்ஸை தொடர்ந்த இந்தியா 186/6-க்கு டிக்ளர் செய்தது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!
previous post