சென்னை: அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை திறமையாக செயல்பட்டு, கையும் மெய்யுமாக அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியது. மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். அங்கு சோதனை நடத்த மறுக்கப்பட்டது, பின்னர் அங்கித் திவாரி அலுவலகத்தில் மட்டும் சோதனை நடத்த அனுமதிக்கப்பட்டது என்று வைகோ தெரிவித்துள்ளார்.